மதுரை

ஆட்டோ மோதியதில் நடத்து சென்றவா் பலி

DIN

மதுரை அருகே திங்கள்கிழமை ஆட்டோ மோதியதில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் கீழக்குயில் குடியைச் சோ்ந்த ஜெயக்கொடி மகன் உதயகுமாா்(42). இவா், திங்கள்கிழமை கீழக்குயில்குடி, அண்ணா பல்கலைக் கழகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று உதயகுமாா் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் உதயகுமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து உதயகுமாரின் சகோதரா் சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் செல்வத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT