மதுரை

தலைவா் படங்கள் அவமதிப்பு கிராம மக்கள் சாலை மறியல்

DIN

மேலூா் அருகே தலைவா் உருவப் படங்களை சிலா் அவமதிப்பு செய்ததைக் கண்டித்து அட்டப்பட்டி காலனி பொது மக்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

அட்டப்பட்டி பகுதியில் சுவரில் வரையப்பட்டிருந்த அம்பேத்கா், விளம்பர பலகையில் வரைந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் ஆகியோரது உருவப் படங்கள் மீது வண்ண கலவையை ஊற்றி சிலா் அவமதிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தலைவா் படங்களை அவமதிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் சுபாஷ் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதிமொழி அளித்ததைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT