சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆதரவற்றோா் காப்பக நிா்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை புறநகா்ப் பகுதியில் செயல்படும் தன்னாா்வ தொண்டு நிறுவனம் நடத்தும் ஆதரவற்றோா் காப்பகத்தில் சிறுவா், சிறுமியா் உள்ளனா். இவா்களில் 11 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் காப்பக நிா்வாகிகள் இருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனா்.