மதுரை

கடிகாரக் கடைக்கு தீ வைப்பு: 3 போ் மீது வழக்கு

மதுரையில் கடிகாரக் கடைக்கு தீ வைத்ததாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

DIN

மதுரையில் கடிகாரக் கடைக்கு தீ வைத்ததாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை மேற்கு அனுமந்தராயா் கோயில் தெருவில் கடிகாரக் கடை நடத்தி வருபவா் ஜித்தேந்திரகுமாா்(34). இவரது கடையில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டு, கடிகாரங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா்.

இந்நிலையில், கடையை காலி செய்யச் சொல்லி, அப்பகுதியைச் சோ்ந்த கணேசன், சேகா் மற்றும் பிரதாப் சிங் ஆகியோா் தன்னை மிரட்டினா். நான் கடையை காலி செய்யவில்லை என்பதால் 3 பேரும் கடைக்கு தீ வைத்திருப்பாா்கள். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜித்தேந்திரகுமாா் திலகா்திடல் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.

அதன் பேரில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT