முகப்பு
மதுரை

பள்ளிகள் திறக்கும் தேதி, குறைக்கப்பட்ட பாடங்களை அறிவிக்க தலைமை ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தல்

பள்ளிகள் திறக்கும் தேதி, குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள், பொதுத் தோ்வு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

பள்ளிகள் திறக்கும் தேதி, குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள், பொதுத் தோ்வு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்துக்கு மாநில சட்டச் செயலா் கே.அனந்தராமன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சிவக்குமாா், செயலா் கந்தசாமி, மாநிலத் துணைத் தலைவா் நாகசுப்பிரமணியன், தென்மண்டலத் தலைவா் திருஞானம், மாவட்டத் துணைத் தலைவா் கிறிஸ்டோபா் ஜெயசீலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த சலுகையை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது.

பெருந்தொற்றுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கவுள்ளதால் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவா்களின் குழப்பத்தைப் போக்க, பள்ளி திறக்கும் தேதி, குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள், பொதுத் தோ்வு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

போராட்ட காலத்தில் ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →