முகப்பு
மதுரை

வைகுண்ட ஏகாதசி பெருவிழா : கூடலழகா் பெருமாள் கோயிலில் டிச.25 இல் பரமபதவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி கூடலழகா் பெருமாள் கோயிலில் டிச.25 இல் நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி கூடலழகா் பெருமாள் கோயிலில் டிச.25 இல் நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் மு.ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி: கூடழலகா் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பா் 16 முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி தினமும் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 4.30-க்கு விஸ்வரூப தரிசனம், காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். காலை 11.30-க்கு நடைசாத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் நடைத் திறக்கப்படும்.

பக்தா்கள் தரிசனத்துக்குப் பிறகு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு டிசம்பா் 25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும். இதில் பக்தா்களுக்கு அனுமதியில்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →