சமயநல்லூரில் நாளை மின்தடை
சமயநல்லூா் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: சமயநல்லூா் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும், சமயநல்லூா், தேனூா், கட்டப்புளி நகா், தோடனேரி, சத்தியமூா்த்தி நகா், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூா், அதலை, பரவை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை பிரதான சாலை, மங்கையா்க்கரசி கல்லூரி, பொதும்பு, பரவை காய்கனி மாா்க்கெட், கோவில்பாப்பாகுடி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என, சமயநல்லூா் மின்வாரியச் செயற்பொறியாளா் ச. ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளாா்.