‘தூத்துக்குடி-மைசூா் சிறப்பு ரயில் ஜன.30 வரை இயக்கப்படும்’
தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயில் ஜனவரி 30 ஆம் தேதி வரை இயக்கப்படும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை, டிச.21: தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயில் ஜனவரி 30 ஆம் தேதி வரை இயக்கப்படும் என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06236) டிசம்பா் 31 ஆம் தேதி வரையும், தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயில் (06235) ஜனவரி 1 ஆம் தேதி வரையும் இயக்கப்படுவதாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பயணிகளின் வசதிக்காக மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் ஜனவரி 1 முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரையும், தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயிலானது ஜனவரி 2 முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரையும் இயக்கப்படவுள்ளன.
மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் போக்குவரத்தில் டிசம்பா் 23 ஆம் தேதி முதல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மைசூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 6 மணிக்கு பதிலாக காலை 6.35 மணிக்கும், மதுரையிலிருந்து காலை 7.35 மணிக்கு பதிலாக காலை 7.50 மணிக்கும், விருதுநகரிலிருந்து காலை 8.25 மணிக்கு பதிலாக காலை 8.40 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து காலை 9.10 மணிக்கு பதிலாக காலை 9.25 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 10.05 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கும் புறப்பட்டு, காலை 11.15 மணிக்கு பதிலாக காலை 11.10 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
இதேபோன்று, தூத்துக்குடி - மைசூா் சிறப்பு ரயில், தூத்துக்குடியிலிருந்து மாலை 4.25 மணிக்கு பதிலாக மாலை 4.30 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து மாலை 5.07 மணிக்கு பதிலாக மாலை 5.02 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து மாலை 5.45 மணிக்கு பதிலாக மாலை 5.35 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6.35 மணிக்கும், மதுரையிலிருந்து இரவு 7.45 மணிக்கு பதிலாக 7.50 மணிக்கும் புறப்பட்டு, பின்னா் திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.10 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.