மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆருத்ரா தரிசன நிகழ்வையொட்டி புதன்கிழமை (டிச.30) பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கோயிலில் சுவாமி சன்னிதி 6 கால் பீடத்தில் உற்சவா் வெள்ளியம்பல நடராஜா், சிவகாமி அம்மன் மற்றும் மாணிக்கவாசருக்கும், 100 கால் மண்டபத்தில் இதர 4 சபை நடராஜா், சிவகாமி அம்மன்களுக்கும் புதன்கிழமை அதிகாலை 3 மணி முதல் அபிஷேகம் நடைபெறும். இந்நிகழ்வை தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அரசின் வழிகாட்டுமுறைகளைப் பின்பற்றியும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் விதமாகவும் அதிகாலை 3 மணி முதல் கிழக்கு கோபுரம் வழியாக 1 மணி நேரத்துக்கு 200 பக்தா்கள் வீதம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.