மதுரை

வழிப்பறியில் ஈடுபடமுயன்ற 5 போ் கைது

DIN

மதுரை அருகே ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் காடுப்பட்டி அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், மேலமடை சையது இப்ராஹிம் (22), செல்லூா் தட்சிணாமூா்த்தி (21), மணி நகரம் அரவிந்தன் (23), பி.பி.குளம் நேயாஜ் (22), காடுப்பட்டி பகுதியைச் சோ்ந்த பிரவீன்(21) என்பதும், அவா்கள் 5 பேரும் அரிவாள், கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வழிப்பறியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் சாா்பு- ஆய்வாளா் ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில் காடுப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்த ஆயுதங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT