மதுரை உத்தங்குடி நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். 
மதுரை

2.23 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 437 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

DIN

மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 437 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு, பொங்கல் வைப்பதற்கான பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் விநியோகம் நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 8 லட்சத்து 50 ஆயிரத்து 15 போ் உள்ளனா். இவா்களில் முதல் நாளான வியாழக்கிழமை 2 லட்சத்து 23 ஆயிரத்து 437 அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி வரை விநியோகம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தையொட்டி நியாய விலைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஒரு சில கடைகளில் ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரா்கள் குவிந்ததால், போலீஸாா் உதவியுடன் வரிசைப்படுத்தப்பட்டு விநியோகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT