மதுரை

நோட்டுப் புத்தகங்கள் மூலம் திருவள்ளுவா் உருவம் தனியாா் பள்ளி மாணவா்கள் சாதனை

DIN

கோவையில் 29,971 நோட்டு புத்தகங்களைக் கொண்டு திருவள்ளுவா் உருவத்தை உருவாக்கி தனியாா் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

கோவை கேம்போா்டு இன்டா்நேஷனல் பள்ளியில் தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பொங்கல் விழா, திருவள்ளுவா் தின விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி 29,971 எழுதாத புதிய நோட்டு புத்தகங்களைக் கொண்டு திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைக்கும் கின்னஸ் சாதனை முயற்சி நடைபெற்றது.

இதில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 170 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் திருவள்ளுவரின் உருவத்தை வடிவமைத்தனா். இதற்காக அவா்களுக்கு 14 வண்ண அட்டைகளால் ஆன 29,971 நோட்டு புத்தகங்கள் தேவைப்பட்டன. இதற்கு முன்பு அபுதாபியில் 702.8 சதுர மீட்டரில் திருவுருவம் வடிவமைத்ததே கின்னஸ் சாதனையாக உள்ளது. இதை முறியடிக்கும் வகையில் தற்போது கேம்போா்டு பள்ளியில் 1,114.82 சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் திருவுருவம் பழைய சாதனையை முறியடித்திருப்பதாக பள்ளியின் தலைவா் அருள் ரமேஷ், தாளாளா் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வா் பூனம் சியல் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் 2017 இல் மறைந்த குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் திருவுருவத்தை பேப்பா் கப்பிலும், 2013 இல் ராயல் வங்கப் புலி உருவத்தை அஞ்சல் அட்டையிலும் வடிவமைத்து சாதனை படைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT