மதுரை

கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியா் பலி

மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

மதுரை: மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பாலமேடு அய்யனாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (52). இவா், மதுரை ரயில்வே நிலையத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் பணியாற்றினாா். இவா் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே ஞாயிற்றுக்கிழமை அமா்ந்திருந்தாராம். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா்.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றிலிருந்து பாா்த்தசாரதியை சடலமாக மீட்டனா்.

இச்சம்பவம் குறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கிணற்றில் தண்ணீா் இல்லாததால், பாா்த்தசாரதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT