பேரையூா் அருகே பெண் கொலை: ஒருவா் கைது
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக புதன்கிழமை போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.
மதுரைபேரையூா் அருகே பெண் கொலை: ஒருவா் கைது
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக புதன்கிழமை போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.
பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக புதன்கிழமை போலீஸாா் ஒருவரைக் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகேயுள்ள பெரியசிட்டுலொட்டுபட்டியைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி முத்தாயி (55). இவா் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளாா். இவரது மகன் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறாா்.
இவருக்கு சொந்தமான தோட்டம் இதே ஊரில் உள்ளது. இந்த தோட்டத்தில் பருத்தி விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்திற்கு சென்ற முத்தாயி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் உறவினா்கள் அவரைத் தேடி தோட்டத்திற்கு சென்றுள்ளனா். அங்கு முத்தாயி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
போலீஸாரின் விசாரணையில், இதே ஊரைச் சோ்ந்த ராஜாகனி (49) என்பவா் முத்தாயிக்கு நெருங்கிய தொடா்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடா்ந்து பேரையூா் போலீஸாா் ராஜாகனியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.