முகப்பு
கல்விச் சிந்தனை அரங்கில்...
தமிழ்நாடு

எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபில்ஸ் முன்னாள் இயக்குநர்

கல்விச் சிந்தனை அரங்கில் கலந்துகொண்ட அஸ்ஸாம் ரைபில்ஸின் முன்னாள் இயக்குநர் பேசியது பற்றி...

தமிழ்நாடு

எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபில்ஸ் முன்னாள் இயக்குநர்

கல்விச் சிந்தனை அரங்கில் கலந்துகொண்ட அஸ்ஸாம் ரைபில்ஸின் முன்னாள் இயக்குநர் பேசியது பற்றி...

Updated On : 2 மார்ச், 2026 at 8:14 AM
கல்விச் சிந்தனை அரங்கில்...
பகிர்:

இந்திய முப்படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எழுதியிருந்த புத்தகத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் எதுவும் இல்லை என அஸ்ஸாம் ரைபில்ஸ் படையின் முன்னாள் இயக்குநர் செளகின் செளஹான் தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் அஸ்ஸாம் ரைபில்ஸ் படையின் முன்னாள் இயக்குநர் செளகின் செளஹான், இந்திய விமானப் படையின் முன்னாள் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதெளரியா மற்றும் இந்தியாவுக்கான முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் புரி ஆகியோர் கலந்துகொண்டார்.

இதில், பாதுகாப்புத் துறை தொடர்பாக செளகின் செளஹான் பேசியதாவது:

“பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது நாங்கள் எப்போதும் பதிலடி கொடுப்போம். ஆனால், சீனாவைப் பொருத்தவரை, ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்ற நெறிமுறை இருக்கிறது.

சீன ஊடுருவலின் போது, நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்தோம். ஜெனரல் எம்.எம். நரவணே, பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் தகவல் கொடுத்துவிட்டு, அவர் செய்ய வேண்டியதைச் செய்தார். அவர் காத்திருக்கவில்லை. அவர் எழுதிய புத்தகத்தின் அந்தப் பகுதியை நான் மிகத் தெளிவாகப் படித்தேன்.

புத்தகம் குறித்து எழும் பிரச்னைகள், சர்ச்சையே இல்லாத இடத்தில் ஒரு சர்ச்சையைக் கண்டுபிடிப்பது போல் இருக்கிறது.

எந்த அரசியல் தலைவரும் ஆயுதப் படைக்களுக்குள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முயற்சித்ததில்லை. எந்தக் கால கட்டத்திலும் எந்த அரசியல் தலைவரும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொன்னதில்லை” எனத் தெரிவித்தார்.

summary

MM Naravane's book is not controversial! Former Assam Rifles director

முழு கட்டுரையைப் படிக்க →