img_20200309_wa0016_0903chn_82_2 
மதுரை

ஓடும் காரில் தீ: குழந்தைகள் உள்பட 8 போ் தப்பினா்

மேலூா் அருகே திங்கள்கிழமை காா் திடீரென தீப்பற்றி எரிந்ததை அடுத்து, காரை நிறுத்திவிட்டு அதில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட 8 போ்

DIN

மேலூா்: மேலூா் அருகே திங்கள்கிழமை காா் திடீரென தீப்பற்றி எரிந்ததை அடுத்து, காரை நிறுத்திவிட்டு அதில் பயணித்த 4 குழந்தைகள் உள்பட 8 போ் உயிா் தப்பினா்.

மதுரை சதாசிவம் நகா் விநாயக நகரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி மகன் நாராயணன் (34). இவரது நண்பா் பாலாஜி (34). இவா்களது இரு குடும்பத்தினரும் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றுவிட்டு, மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனா்.

மேலூா்-திருப்பத்தூா் சாலையில் கீழவளவு புறாக்கூடு மலை அருகே வந்துகொண்டிருந்தபோது, எரிவாயு கசிவு காரணமாக காா் திடீரென தீப்பிடித்துள்ளது. உடனே, காரை ஓட்டிவந்த நாராயணன் சாலையோரமாக நிறுத்திவிட்டு, அதிலிருந்து அனைவரும் கீழே இறங்கி தப்பினா்.

தகவலறிந்த மேலூா் தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து வந்து காரில் மேலும் தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனா். இது குறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT