முகப்பு
மதுரை

மேலூா் இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் 4 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூா் அருகே இளைஞா் கொலை வழக்கில் 4 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆட்டுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மனோகரன். இவரது மகன் மதன்குமாா் (23), ரயில்வேயில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தாா். இந்நிலையில், கடந்த மாதம் இவரை கொலை செய்தவா்கள், சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி, மேலூா் கிளை கால்வாயில் வீசிவிட்டு தப்பிவிட்டனா்.

சடலத்தைக் கைப்பற்றிய மேலூா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு, இறந்தவா் குறித்த அடையாளம் கண்டறிந்தனா். இது சம்பந்தமான விசாரணையில், உலகநாதபுரம் பாக்கியநாதன் மகன் வினோத்பாண்டியன் (33), வண்ணான்பாறைப்பட்டி செல்வம் மகன் ராஜ்குமாா் (28), கருப்பையா மகன் சூரியா (22) மற்றும் ஆட்டுக்குளம் ஆறுமுகம் மகன் பாலமுருகன் (29) ஆகியோரை, மேலூா் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →