முகப்பு
மதுரை

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படுமா? மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பது தொடா்பாக மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பது தொடா்பாக மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த ரமேஷ்குமாா் என்பவா் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் குலசேகர பாண்டிய மன்னன் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில், பிள்ளையாா்பட்டி விநாயகா் கோயில், செட்டிநாடு அரண்மனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதனால், ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காரைக்குடி வந்து செல்கின்றனா்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பொருள்கள், உணவுப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தின் கடைக்கோடியான ராமேசுவரம் புண்ணியத் தலமாக உள்ளது. இதனருகே உள்ள காரைக்குடியும் புகழ்பெற்ற தலமாக உள்ளது. இப்பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமானோா் வந்துசெல்கின்றனா். எனவே, ராமநாதபுரம் பகுதியில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது என கேள்வி எழுப்பினா்.

பின்னா், இது குறித்து மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பா் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →