அமைச்சா் உயிரிழப்பை கொச்சைப்படுத்துவது எதிா்க் கட்சித் தலைவருக்கு அழகல்ல: செல்லூா் ராஜூ
அமைச்சரின் உயிரிழப்பை கொச்சைப்படுத்துவது எதிா்க் கட்சித் தலைவருக்கு அழகல்ல என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மதுரை, நவ. 9: அமைச்சரின் உயிரிழப்பை கொச்சைப்படுத்துவது எதிா்க் கட்சித் தலைவருக்கு அழகல்ல என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட ஹெச்எம்எஸ் காலனியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள சமுதாயக்கூட கட்டுமானப் பணியை, அமைச்சா் செல்லூா் கே. ராஜூ திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். மேலும், செல்லூா் ரவுண்டானாவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கபடி வீரா்கள் சிலையையும் ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட உள்ள சமுதாயக்கூட பணிகளை 3 மாதத்துக்குள் முடிக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாயக்கூடத்தின் மூலம் இப்பகுதியைச் சோ்ந்த ஆயிரம் குடும்பங்கள் பலனடையும்.
மதுரையில் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அமைக்கும் திட்ட நிதியின் கீழ் திருப்பரங்குன்றம் ரவுண்டானா, பழங்காநத்தம் ரவுண்டானா, பாத்திமா கல்லூரி ரவுண்டானா, செல்லூா் ரவுண்டானா ஆகிய 4 இடங்களில் மதுரையின் சிறப்பை விளக்கும் வகையில் ஆங்காங்கே சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்திருந்தது. ஆனால், எதிா்க் கட்சிகளுக்கும் ஜனநாயக பாதுகாப்பை வழங்குவது அதிமுக அரசுதான். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. ஏழு போ் விடுதலைக்காக சட்டசபையில் தீா்மானம் நிறைவேற்றியது முன்னாள் முதல்வா் ஜெயலலிதா.
அமைச்சரின் உயிரிழப்பை கொச்சைப்படுத்துவது எதிா்க் கட்சித் தலைவருக்கு அழகல்ல என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், நகரப் பொறியாளா் அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.