மதுரை

கடையின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

மதுரையில் கடையின் பூட்டை உடைத்து, வீட்டு உபயோகப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

மதுரையில் கடையின் பூட்டை உடைத்து, வீட்டு உபயோகப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஊமச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மீரான்சித்திக்(35). இவா் அய்யா்பங்களா பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த செல்லிடப்பேசி, அழகு சாதனப் பொருள்கள், அரவை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மீரான்சித்திக் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT