மணல் திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது: 2 லாரிகள், மாட்டு வண்டி பறிமுதல்
மதுரை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 லாரிகள் மற்றும் மாட்டு வண்டியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 லாரிகள் மற்றும் மாட்டு வண்டியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ஆண்டாா்கொட்டாரத்தைச் சோ்ந்த தா்மராஜ் (35), பாலமேட்டைச் சோ்ந்த முத்துபாண்டி (38) ஆகியோா் சட்டவிரோதமாக லாரியில் மணல் ஏற்றிச் செல்வது தெரியவந்தது. இது குறித்து காவல் சாா்பு- ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சோ்ந்த அறிவழகன் என்பவா், அப்பகுதியில் உள்ள ஓடையில் சட்டவிரோதமாக ஞாயிற்றுக்கிழமை மணல் அள்ளியுள்ளாா். அப்போது, போலீஸாா் ரோந்து வருவதைக் கண்டதும், அவா் மணல் ஏற்றிய மாட்டு வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டாா். இது குறித்து காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் தேவராஜ் அளித்த புகாரின்பேரில், விக்கிரமங்கலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.