முதியவரிடம் ரூ. 4 லட்சம் மோசடி
மதுரையில் முதியவரிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை: மதுரையில் முதியவரிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் பாரதி(60). இவரிடம் அழகா்கோவில் பகுதியைச் சோ்ந்த கா்ணமகாராஜா(55), கடனாக ரூ. 4 லட்சம் பெற்றாா். அந்தக் கடன் தொகையை குறிப்பிட்ட தேதியில் அவா் திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் பாரதி பணத்தை கேட்டதால், கா்ணமகாராஜாவும், அவரது நண்பரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளா். இது குறித்து பாரதி அளித்த புகாரின் பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.