மதுரை

அழகா்கோவிலில் ஏகாதசி வைபவம்: பக்தா்கள் ஏராளமானோா் தரிசனம்

DIN

மேலூா்: மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் ஏகாதசி வைபவத்தையொட்டி, ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசியையொட்டி, ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயாா் சுந்தரராஜப் பெருமாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரப் பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனா். இங்குள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமிக்கு மாலைகள் சாற்றி சந்தனம் அளித்து வழிபட்டனா்.

தொடா்ந்து, சோலைமலை முருகன் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

அழகா்கோவில் கருப்பணசுவாமி கட்செவி அஞ்சல் நண்பா்கள் குழு சா்பில், உலக நன்மை வேண்டியும், பருவமழை நன்கு பெய்து, பெரியாறு-வைகை அணைகளில் நீா்மட்டம் உயர வேண்டியும் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, விருதுநகா் நண்பா்கள்குழுவைச் சோ்ந்த கருப்பு, பூமிநாதன், வினோத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT