மதுரை

பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN

மதுரையில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் நிசாா் அலி (34). இவா் 2017 ஆண்டு 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதுரை நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நிசாா் அலி மீதான புகாா் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புளோரா தீா்ப்பளித்தாா். இதையடுத்து நிசாா் அலி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT