மதுரை

விளக்கு பூஜையில் தீயில் கருகிய பெண் பலி

DIN

மதுரை அருகே கோயிலில் நடைபெற்ற விளக்கு பூஜை நிகழ்ச்சியில் தீயில் கருகிய பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை ஆத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த சூா்யமூா்த்தி மனைவி தேன்மொழி(59). இவா் புதுப்பட்டி முனீஸ்வரன் கோயிலில் ஜூலை 23 ஆம் தேதி நடந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்டாா். அப்போது, அவரது சேலையில் தீப் பற்றியது. இதில் பலத்த காயமடைந்த தேன்மொழி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேன்மொழியின் மகன் காா்த்திகேயேன் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT