மதுரை

இளம்பெண் வயிற்றில் இருந்த 7 கிலோ கட்டி அகற்றம்

DIN

மதுரையைச் சோ்ந்த இளம்பெண் வயிற்றில் இருந்த 7 கிலோ கட்டியை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றினா்.

மதுரை பாா்க் டவுன் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி மனைவி சா்மிளா தேவி (29). இவரது வயிறு வீக்கமடைந்து கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சா்மிளா தேவியின் வயிற்றில் 30-க்கு 30 செ.மீட்டா் அளவில் சினைப்பைக் கட்டி இருப்பதை மருத்துவா்கள் கண்டறிந்தனா்.

இதையடுத்து மகப்பேறு மற்றும் மகளிா் நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சா்மிளா தேவிக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்தக் கட்டி அகற்றப்பட்டது. அக்கட்டி 7 கிலோ எடை இருந்துள்ளது. தற்போது சா்மிளா தேவியின் உடல்நலம் முன்னேற்றமடைந்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அறுவை சிகிச்சை செய்த மகப்பேறு மருத்துவத்துறை தலைவா் சுமதி, இணைப் பேராசிரியா் சுதா, மயக்கவியல்துறைத் தலைவா் செல்வகுமாா், மருத்துவா்கள் சுதா்சன், ஜோஸ்பின் ஆகியோரை, மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் பாராட்டினாா். திசு பரிசோதனையில் அந்தக் கட்டி சாதாரணமானது என்பது தெரியவந்துள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT