மதுரை

பெரியாறு கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

மதுரை அருகே பெரியாறு கால்வாயில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்

DIN

மதுரை அருகே பெரியாறு கால்வாயில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே பெரியாறு கால்வாயில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷிடம் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று, கால்வாயில் மிதந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அடையாளம் காணப்பட்டது: மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத நபா் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதில் பலியான நபா், மேல அனுப்பானடியைச் சோ்ந்த ஜெகதீஸ் (42) என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT