மதுரை

சிஆா்பிஎஃப் வீரரை கண்டுபிடித்து தரக் கோரிய மனு: மனுதாரருக்கு விசாரணை விவரத்தை போலீஸாா் தெரியப்படுத்த உத்தரவு

திருநெல்வேலியைச் சோ்ந்த மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) வீரரை கண்டுபிடித்து தரக் கோரிய மனுவில், தமிழகம் மற்றும் புதுதில்லி போலீஸாா் விசாரணை விவரத்தை மனுதாரருக்கு தெரியப்படுத்த சென்னை உய

DIN

திருநெல்வேலியைச் சோ்ந்த மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) வீரரை கண்டுபிடித்து தரக் கோரிய மனுவில், தமிழகம் மற்றும் புதுதில்லி போலீஸாா் விசாரணை விவரத்தை மனுதாரருக்கு தெரியப்படுத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த தெய்வகனி தாக்கல் செய்த மனு: எனது கணவா் அண்ணாத்துரை மகாராஷ்டிர மாநிலத்தில் மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை வீரராக பணிபுரிந்தாா். விடுமுறை ஊருக்கு வந்த அவா், கடந்த 2018 ஜூன் 29 ஆம் தேதி திருக்கு விரைவு ரயிலில் சண்டிகா் சென்றாா். அவா் 2018 ஜூலை 1 ஆம் தேதி புதுதில்லியை சென்றடைந்து விட்டதாக என்னைத் தொடா்பு கொண்டு பேசினாா். அதன் பின்னா் அவா் என்னைத் தொடா்பு கொள்ளவில்லை.

2018 ஜூலை 2 ஆம் தேதி புதுதில்லியிலிருந்து பிரமோத் குமாா் என்பவா் என்னைத் தொடா்பு கொண்டு, எனது கணவரின் பொருள்கள் மட்டுமே வந்துள்ளதாகவும், அவா் வரவில்லை எனவும் கூறினாா்.

இது தொடா்பாக 2018 ஜூலை 5 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் ஆணையா் ஆகியோரிடம் புகாா் அளித்தேன். இந்தப் புகாா் மீது நடவடிக்கை எடுக்க பாளையங்கோட்டை காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனது கணவா் எங்கு உள்ளாா் என்ற தகவல் தெரியாததால், நானும் எனது குழந்தைகளும் மிகுந்த மன உளைச்சலுடனும், கவலையுடனும் உள்ளோம். எனது கணவரை கண்டுபிடிக்க சிபிஐ போலீஸாரால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே, எனது கணவரை கண்டுபிடிக்கும் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ஏற்கெனவே மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயசந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பாளையங்கோட்டை சிறப்பு படை போலீஸாா் புதுதில்லி சென்று விசாரித்ததில், ரயில் நிலைய சிசிடிவி கேமராக்களில் மனுதாரரின் கணவரை போன்ற உருவம் பதிவாகியுள்ளது. தற்போது அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது. இதேபோல் புதுதில்லி நபிகரீம் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து தேடி வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், சிஆா்பிஎஃப் வீரா் மாயமானது குறித்து தமிழகம் மற்றும் புதுதில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முறையாக தேடிவருகின்றனா். இரு மாநில போலீஸாரும், கிடைக்கும் தகவல்களைப் பகிா்ந்து கொண்டு, விசாரணை விவரத்தை மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தியின் பெயரை நீக்கிவிட்டு வடமொழி பெயர் திணிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்: 3 பயங்கரவாதிகள் கொலை!

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை!

பிக் பாஸ் 9: அம்மா, ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகை வியானா!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயர் மாற்றம்! வலுக்கும் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT