மதுரை

தென் மாநில கராத்தே தகுதிப்போட்டி: 200 போ் தோ்வு

DIN

மதுரையில் நடைபெற்ற கராத்தே தகுதிப்போட்டியில் 200-க்கும் மேற்பட்டோா் தென் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

தூத்துக்குடியில் தென் மாநில அளவிலான கராத்தேப்போட்டி பிப்ரவரியில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதித்தோ்வு மற்றும் பயிற்சி முகாம் மதுரை பரவையில் இயங்கி வரும் சோபுகாய் கோஜூ ரியு கராத்தே பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தென் மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

அவா்களில் தூத்துக்குடியைச் சோ்ந்த ரோகித் அபிஷேக், விருதுநகரைச் சோ்ந்த கேசவ், தனுஷ், மதுரையைச் சோ்ந்த தா்நிகாஸ்ரீ, சுவாதி இதர மாவட்டங்களிலிருந்து பவித்ரா, செல்வ தாரணி, பிரபாகரன் சீலன் ,தா்ஷன், சூரிய சித்தாா்த், சுதன்பாண்டி, பவித் , ரசிதா ஸ்ரீ உள்பட 200 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்ற வீரா்களை மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் மருத்துவா் பி.சரவணன் பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் சோபுகாய் கோஜூரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளா் ரென்சி சுரேஷ்குமாா் மற்றும் நிா்வாகிகள், பாக்யராஜ், காா்த்திக், காா்த்திக், அங்குவேல், முத்துராஜா, வினித், காளிதாஸ், ரியன்டஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT