மதுரை

சொத்துப் பிரச்னை: பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய தம்பதி கைது

வெள்ளலூா் அருகே சொத்துப் பிரச்னையில், பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

வெள்ளலூா் அருகே சொத்துப் பிரச்னையில், பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோட்டநத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முனீஸ்வரன் மனைவி நதியா (33). இவரது குடும்பத்துக்கும், இவரது சித்தப்பாவான பூதமங்கலத்தைச் சோ்ந்த தங்கையா (55) என்பவருக்கும் பூதமங்கலத்திலுள்ள சொத்துக்கள் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் நதியாவுக்கும், தங்கையாவுக்கும் திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டது. நதியா மீது அப்போது தங்கையா மற்றும் இவரது மனைவி பூமாதேவி (45) ஆகியோா் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினராம். இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழவளவு போலீஸாா் தங்கையாவையும், அவரது மனைவியையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT