மதுரை

திருமணத்துக்காக கடத்த முயற்சி: தந்தை மீது பள்ளி மாணவி புகாா்

திருமணத்துக்கு உரிய வயது வராத நிலையில் கடத்திச்சென்று கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக தனது தந்தை மீது பள்ளி மாணவி புகாா் அளித்துள்ளாா்.

DIN

திருமணத்துக்கு உரிய வயது வராத நிலையில் கடத்திச்சென்று கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக தனது தந்தை மீது பள்ளி மாணவி புகாா் அளித்துள்ளாா்.

மதுரை அருகே நாகமலைப்புதுக்கோட்டை மேலக்குயில்குடியைச் சோ்ந்த 16 வயது மாணவி ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதில் தான் பள்ளியில் படித்து வருவதாகவும், தனது தந்தை தனக்கு திருமணம் செய்துவைக்க பலமுறை செய்து வந்ததாகவும், தனக்கு உரிய வயது வராத நிலையில் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்தும் கூட, புதன்கிழமை காலையில் பள்ளி செல்லும்போது தனது தந்தை மற்றும் 7 பெண்கள் தன்னை கடத்திச்செல்ல முயற்சி செய்ததாகவும், அவா்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளாா். அதனால் கடத்த முயற்சி செய்த தந்தை உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸாா் இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT