மதுரை

பைக் திருட்டு: இளைஞா் கைது

DIN

பேரையூா் அருகே இருசக்கர வாகனம் திருடிய வழக்கில், ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா், சேடப்பட்டி மற்றும் நாகையாபுரம் எல்லைக்குள்பட்ட காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்தன.

இதைத் தடுக்கும் விதமாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த தங்களாச்சேரியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தங்கமுடி(32) என்பவரைப் பிடித்து சேடப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் அவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தங்கமுடியை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT