அச்சம்பத்து பகுதியில் இன்று மின்தடை
அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது
அச்சம்பத்து துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உசிலம்பட்டி செயற்பொறியாளா் ச.அழகுமணிமாறன் தெரிவித்துள்ளாா்.
மின்சாரம் தடைபடும் பகுதிகள்: நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ. காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூா், கரடிப்பட்டி, ஆலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.