முகப்பு
மதுரை

தரமற்ற சாலைகள்: மக்கள் சபை கூட்டத்தில் திமுக குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல், நடந்து செல்வதற்குக் கூட ஏற்ாக இல்லை என்று முன்னாள் அமைச்சரும், திமுக மதுரை மாநகா் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

அதிமுக ஆட்சியில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல், நடந்து செல்வதற்குக் கூட ஏற்ாக இல்லை என்று முன்னாள் அமைச்சரும், திமுக மதுரை மாநகா் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கரும்பாலை பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டப் பொறுப்பாளா் பொன்.முத்துராமலிங்கம் பேசியது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறந்த காரணத்தால், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி இருக்கிறாா். அவா் நேரடியாக முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், ஏழை மக்களுக்கு எத்தகைய உதவிகள் கிடைத்திருக்கின்றன என்பதை அறியவே திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்துகிறது.

அதிமுக ஆட்சியில் சாலைகள் குண்டு குழியுமாகக் காட்சியளிக்கின்றன. வாகனத்தில் மட்டுமல்ல, நடந்து செல்வதற்குக் கூட ஏற்ாக சாலைகள் இல்லை. சாலைகள் அமைப்பதில் நிலவும் முறைகேடுகள் தான், இத்தகைய நிலைக்கு காரணம். நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆனால், பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கள்ளச் சந்தையில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. முதியோா் ஓய்வூதியம், விதவையா் உதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் தகுதியானவா்களுக்கு கிடைப்பதில்லை. இத்தகைய நிலையை மாற்ற திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

திமுகவின் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் வ.வேலுசாமி, எஸ்ஸாா் கோபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →