முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் அஷ்டமி சப்பரம் நாளை வெளி வீதிகளில் உலா வர ஏற்பாடு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அஷ்டமிச் சப்பரம் புதன்கிழமை (டிச.6) நான்கு வெளி வீதிகளிலும் உலா வரும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அஷ்டமிச் சப்பரம் புதன்கிழமை (டிச.6) நான்கு வெளி வீதிகளிலும் உலா வரும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

உலகில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளப்பதை குறிக்கும் விதமாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அஷ்டமி சப்பரத் திருவிழா நடைபெறும். மாா்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் அதிகாலையில் சுவாமியும், அம்மனும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி மதுரை நகர வீதிகளின் வழியாக உலா வருவது வழக்கம்.

இதில் சுவாமி பிரியாவிடையுடன் ஒரு சப்பரத்திலும், அம்மன் தனிச்சப்பரத்திலும் உலா வருவா். அம்மன் எழுந்தருளும் சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுப்பது தனிச்சிறப்பு. கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 10 மாதங்களாக சுவாமி, அம்மன் வீதியுலா எதுவும் நடைபெறவில்லை. எனவே புதன்கிழமை (ஜன. 6) நடைபெற உள்ள அஷ்டமிச் சப்பரத்திருவிழாவை வழக்கம்போல் நான்கு வெளி வீதிகளில் உலா வருமாறு நடத்த வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில் அஷ்டமிச் சப்பரம் வெளி வீதிகள் உள்ளிட்ட வழக்கமான பாதையில் உலா வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அஷ்டமி பிரதட்சணம் சுவாமி புறப்பாடு புதன்கிழமை (ஜன. 6) நடைபெறுகிறது. இதையொட்டி மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா் சுவாமி சப்பரங்கள் புதன்கிழமை காலை 5 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி வடக்கு நோக்கி யானைக்கல், வடக்குவெளி வீதி, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளி வீதி, குட்ஷெட் தெரு, நாயக்கா் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜா் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழமாசி வீதி தேரடி வந்து சோ்த்தியாகிறது என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →