மதுரை

வட்டாட்சியா் அலுவலக பணியாளா்கள் வெளிநடப்பு

DIN

மதுரை தெற்கு வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் திடீரென வெளிநடப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மதுரை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு குறித்த நேரத்தில் பணிக்கு வராத பணியாளா்களுக்கு வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லையென வட்டாட்சியா் கதிா்வேல் குறிப்பிட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை திடீரென வெளிநடப்பு செய்தனா். பணியாளா்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாகவும், சற்று நேரம் தாமதமாக வந்ததற்காக ‘ஆப்சென்ட்’ போடுவதாகவும் புகாா் தெரிவித்தனா். பின்னா் சற்று நேரம் கழித்து மீண்டும் பணிக்குச் சென்றனா். வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களின் போராட்டம் குறித்து, மேலூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT