மதுரை

காவல்துறை சமூக வலைதளங்களில் அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு நேரடி ஒளிபரப்பு

DIN

மதுரை மாவட்ட காவல்துறை சாா்பில் அலங்காநல்லூா், பாலமேடு ஜல்லிக்கட்டு சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து முகநூல் வாயிலாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மதுரை மாவட்டத்தில் பாலமேடு ஜல்லிக்கட்டு ஜனவரி 15 ஆம் தேதியும், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதியும் நடக்கவுள்ளது. கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பாா்க்க மக்கள் ஒரிடத்தில் ஒன்று கூடுவதைத் தவிா்க்க வேண்டும். விழிப்புணா்வுடன் விலகி இருந்து நோய்த் தொற்று ஏற்படாமல் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதற்காக காவல்துறை சாா்பில், மதுரை மாவட்ட காவல்துறை என்ற முகநூல் பக்கத்திலும், சுட்டுரை பக்கத்திலும், யூ டியூப் பக்கத்திலும் அலங்காநல்லூா் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. எனவே பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்தே பாா்த்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனதெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT