மதுரை

சொத்துப் பிரச்னையில் தாக்குதல்: தலைக் காயத்துடன் மூதாட்டி புகாா்

DIN

மதுரை: சொத்துப் பிரச்னையில் தாக்கிய உறவினா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்தவா் வயனபிராட்டி (65). இவருக்கு பூா்வீகச் சொத்துகள் அவனியாபுரத்தில் உள்ளன. இந்த சொத்துகளில் வயனபிராட்டிக்கும் பங்கு இருக்கும் நிலையில், அவரது சகோதரா் குடும்பத்தினா் ஏமாற்றி கையெழுத்துப் பெற்றுள்ளனா். இது குறித்து தெரியவந்ததும், சகோதரா் குடும்பத்தினரிடம் சென்று கேட்டபோது, வயனபிராட்டியை தாக்கியுள்ளனா்.

இதையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த மூதாட்டி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளாா். இந்நிலையில், சொத்துப் பிரச்னையில் தன்னை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT