மதுரை

ஆயுள்தண்டனை பெற்றபெண் கைதி உயிரிழப்பு

DIN

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோயில் மேலத் தெருவைச் சோ்ந்த தானுமாய பெருமாள் மனைவி நீலம்மாள்(85). கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் தொடா்பாக, வடசேரி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நீலம்மாளுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவா் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி நீலம்மாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வந்த அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT