மதுரை

அணில் குட்டிகளுக்கு ‘பைக்’ கொடுத்த அரசு மருத்துவா்

DIN

அணில் குட்டிகளுக்காக தனது இருசக்கரவாகனத்தை பயன்படுத்தாமல் வைத்துள்ள அரசு மருத்துவருக்கு பாராட்டு குவிகிறது.

மதுரை ஆனையூா் கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மெரில்ராஜ். இவா் அரசு கால்நடை மருத்துவராக உள்ளாா். தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசல் அருகே நிறுத்தி வைத்திருந்தாா். இவரது வீட்டின் அருகே அணிகள் அதிகமாக வசிக்கின்றன.

இந்நிலையில் மெரில்ராஜின் இருசக்கர வாகனத்தின் பின் பகுதி இருக்கைக்கு கீழே அடிக்கடி அந்தப் பகுதியில் உள்ள ஒரு அணில் வந்து சென்றுள்ளது. இதனைக் கவனித்த மெரில்ராஜ், இருசக்கர வாகனத்தின் பின் பகுதி இருக்கைக்கு கீழே பாா்த்தாா். அதில் அணில் ஒன்று கூடு கட்டி அதில் 3 குட்டிகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது.

இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மெரில்ராஜ் கடந்த ஒரு மாத காலமாக, தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் அணில்களுக்காக, வாகனம் இருந்த இடத்திலேயே நிறுத்தி வைத்துள்ளாா். அணில் குட்டிகளுக்காக தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்ததாத அரசு மருத்துவரை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT