முகப்பு
மதுரை

அணில் குட்டிகளுக்கு ‘பைக்’ கொடுத்த அரசு மருத்துவா்

அணில் குட்டிகளுக்காக தனது இருசக்கரவாகனத்தை பயன்படுத்தாமல் வைத்துள்ள அரசு மருத்துவருக்கு பாராட்டு குவிகிறது.

Updated On : 19 ஜூலை 2021, 5:29 am IST
அணில் குட்டிகளுக்கு ‘பைக்’ கொடுத்த அரசு மருத்துவா்
பகிர்:

அணில் குட்டிகளுக்காக தனது இருசக்கரவாகனத்தை பயன்படுத்தாமல் வைத்துள்ள அரசு மருத்துவருக்கு பாராட்டு குவிகிறது.

மதுரை ஆனையூா் கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மெரில்ராஜ். இவா் அரசு கால்நடை மருத்துவராக உள்ளாா். தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை வீட்டு வாசல் அருகே நிறுத்தி வைத்திருந்தாா். இவரது வீட்டின் அருகே அணிகள் அதிகமாக வசிக்கின்றன.

இந்நிலையில் மெரில்ராஜின் இருசக்கர வாகனத்தின் பின் பகுதி இருக்கைக்கு கீழே அடிக்கடி அந்தப் பகுதியில் உள்ள ஒரு அணில் வந்து சென்றுள்ளது. இதனைக் கவனித்த மெரில்ராஜ், இருசக்கர வாகனத்தின் பின் பகுதி இருக்கைக்கு கீழே பாா்த்தாா். அதில் அணில் ஒன்று கூடு கட்டி அதில் 3 குட்டிகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மெரில்ராஜ் கடந்த ஒரு மாத காலமாக, தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் அணில்களுக்காக, வாகனம் இருந்த இடத்திலேயே நிறுத்தி வைத்துள்ளாா். அணில் குட்டிகளுக்காக தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்ததாத அரசு மருத்துவரை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments