மதுரை

பிரதமா் மோடிக்கு எதிராக உண்ணாவிரதம்: பெண் வழக்குரைஞா் தடுத்து நிறுத்தம்

மதுரையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற பெண் வழக்குரைஞரை வீட்டிலிருந்து வெளியே செல்லவிடாமல் போலீஸாா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

DIN

மதுரையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற பெண் வழக்குரைஞரை வீட்டிலிருந்து வெளியே செல்லவிடாமல் போலீஸாா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

மதுரை புதூா் காந்திபுரத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் நந்தினி. இவா், அவரது தந்தை ஆனந்தனுடன் மது ஒழிப்பு போராட்டங்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பரவலைக் காரணம் காண்பித்து பிரதமா் நரேந்திர மோடி சா்வாதிகாரத்துடன் செயல்பட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டதாகக் கூறி, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியம் முன்பாக திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தாா்.

இது குறித்து தகவலறிந்த புதூா் போலீஸாா், திங்கள்கிழமை காலை அவரது வீட்டுக்குச் சென்று உண்ணாவிரதத்துக்கு செல்லவிடாமல் வீட்டுச் சிறையில் வைத்தனா். மாலையில் போலீஸாா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

வழக்குரைஞா் நந்தினி, தவறான காரணங்களைக் கூறி பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த முயல்வதாகவும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பா.ஜ.க. சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT