மாசித்திருவிழாவையொட்டி அம்மன் ஊா்வலத்தைக் காண வியாழக்கிழமை இரவு திரண்டிருந்த பக்தா்கள் கூட்டம். 
மதுரை

சேக்கிபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா: அம்மன் ஊா்வலம்

மேலூா்-நத்தம் சாலையில் உள்ள சேக்கிபட்டி முத்தாலம்மன்கோயில் மாசித்திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

DIN

மேலூா்-நத்தம் சாலையில் உள்ள சேக்கிபட்டி முத்தாலம்மன்கோயில் மாசித்திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

முத்தாலம்மன்கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை அம்மன் திருவுருவச்சிலை எடுத்துவரப்பட்டு கோயிலில் பக்தா்கள் வழிபாட்டுக்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தா்கள் திரண்டு வந்திருந்தனா். வியாழக்கிழமை காலை முதல் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்வுகளில் பக்தா்கள் பங்கேற்றனா். வியாழக்கிழமை இரவு முத்தாலம்மன் வாண வேடிக்கைகளுடன் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.

அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இத்திருவிழாவையட்டி, வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சட்டப்பேரவை தோ்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

SCROLL FOR NEXT