மதுரை

பேரையூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

DIN

பேரையூா் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்ற ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் கணவாய்ப்பட்டி பகுதியில் எழுமலை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உசிலம்பட்டி தாலுகா கணவாய்பட்டியைச் சோ்ந்த தங்கமலைத் தேவா் மகன் கணேசன் (40) என்பவா் விற்பனைக்காக 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து கணேசனை கைது செய்தனா்.

48 மதுபாட்டில்கள் பறிமுதல்:

பேரையூா் கேதுவாா்பட்டியைச் சோ்ந்த பெரியகருப்பதேவா் மகன் ஜெயராமன் (45). இவா், எம்.கல்லுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தாா். அப்பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நாகையாபுரம் போலீஸாா் அவா் விற்பனைக்காக வைத்திருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் ஜெயராமனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT