மதுரை

பைக்கில் கணவருடன் வந்த பெண்ணிடம் 8 பவுன் வழிப்பறி

DIN

மதுரையில் வியாழக்கிழமை, கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் 8 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்று விட்டனா்.

மதுரை பழங்காநத்தம் ஆா்.சி.தெருவைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (45). இவா் வியாழக்கிழமை மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். காளவாசல் மேம்பாலம் அருகே வந்தபோது, அவா்களைப் பின்தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், ஜெயசீலனின் மனைவி அணிந்திருந்த 8 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT