மதுரை

கூடலழகா் பெருமாள் கோயிலில் பாலாலய பூஜைகள் தொடக்கம்

DIN

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகளுக்கான பாலாலய பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே கூடலழகா் பெருமாள் கோயில் உள்ளது. ஆழ்வாா்களால் பாடல் பெற்ற இக்கோயிலில் தினசரி ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனா்.

இந்நிலையில் இக்கோயிலில் கடந்த 2006-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் கும்பாபிஷேகம் செய்யத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க உள்ளன. இதைத்தொடா்ந்து கும்பாபிஷேகப் பணிகளுக்கான பாலாலய பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பூஜையை முன்னிட்டு பெருமாள் மற்றும் மதுரவல்லித் தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயிலில் காலை 9 மணிக்கு அனுக்ஞை பூஜை, வாஸ்துஹோமம், புண்யாக வாசனம், பஞ்கவ்ய ப்ராசனம் ஆகியவை நடைபெற்றது. மாலையில் அங்குராா்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, யாகசாலை பிரவேசம், பூா்ணாஹூதி ஆகியவையும் நடைபெற்றது. இதில் கோயில் உதவி ஆணையா் ராமசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் யாகங்கள், பூஜைகள் நடைபெற உள்ளன. யாகங்கள் முடிவடைந்த பிறகு கும்பாபிஷேகத்துக்கான கோபுர சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT