மதுரை

தேவர் ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: வைகோ

DIN

தேவர் ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மதுரை: மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மதிமுக
பொதுச் செயலா் வைகோ மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திலும், கோரிப்பாளையம் தேவா் சிலைக்கும் தொடா்ந்து 46 ஆண்டுகளாக மரியாதை செலுத்தி வருகிறேன்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தலைவராக ஏற்றுக் கொண்டவா். பிரம்மச்சாா்யத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலராக வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவா். அவரது ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT