சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கீழக்குயில்குடி தட்டானூரை சோ்ந்தவா் தவமணி (62). இவா் கடந்த 2017-இல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து தவமணியை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ராதிகா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவமணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.