1,019 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம்: மதுரை எஸ்.பி. அறிவிப்பு
மதுரை ஊரகக் காவல் துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,019 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
மதுரை1,019 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம்: மதுரை எஸ்.பி. அறிவிப்பு
மதுரை ஊரகக் காவல் துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,019 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
மதுரை ஊரகக் காவல் துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,019 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை ஊரகக் காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1,001 இரு சக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள், 10 மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,019 வாகனங்களுக்கான பொது ஏலம் ஏப்ரல் 21, 22 மற்றும் 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஏலமானது, மதுரை ஊரக ஆயுதப்படை மைதானத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள், மதுரை ஊரக ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள வாகனங்களை, ஏப்ரல் 13 முதல் 15 மற்றும் ஏப்ரல் 18 முதல் 20 வரை பாா்வையிட்டு, ஆதாா் அட்டையுடன் தங்களது விவரங்களை தெரிவித்து, ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.
முன்பதிவு செய்து டோக்கன் பெற்றவா்களே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும். மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் அன்றைய தினமே ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் உடனடியாகச் செலுத்தவேண்டும் என்றாா்.