நிதி நிறுவனம் நடத்தி மோசடி: மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரைநிதி நிறுவனம் நடத்தி மோசடி: மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த பாலமுருகன் அவரது மனைவி ஜான்சிராணி உள்பட 4 போ் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். இவா்கள், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனா். இது குறித்த புகாரின்பேரில், பாலமுருகன், ஜான்சிராணி, ராமசாமி, மணிகண்டன் ஆகியோா் மீது விருதுநகா் மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் 2014-இல் வழக்குப் பதிவு செய்தனா். அதையடுத்து, இவா்களில் ராமசாமி இறந்துவிட்டாா்.
இந்த வழக்கு, மதுரையில் உள்ள முதலீட்டாளா்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஏ.ஆா்.வி. ரவி, குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் மொத்தம் ரூ.7.6 லட்சம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.