முகப்பு
மதுரை

மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தன்று 60 ஆயிரம் பக்தா்களுக்கு விருந்து

மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி 60 ஆயிரம் பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தன்று 60 ஆயிரம் பக்தா்களுக்கு விருந்து

மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி 60 ஆயிரம் பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி 60 ஆயிரம் பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை தலைவா் பி. தண்டீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி: பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை சாா்பில், கடந்த 22 ஆண்டுகளாக திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தையொட்டி ஏப்ரல் 14-ஆம் தேதி காலை 7 முதல் பிற்பகல் 3 மணி வரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 60 ஆயிரம் பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது.

இவ்விருந்தில், கல்கண்டு சாதம், சா்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை, சாம்பாா் சாதம், தக்காளி சாதம், தயிா்சாதம், உருளைக்கிழங்கு பச்சடி, ஊறுகாய் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படும். விருந்துக்கு தேவையான காய்கறிகள் அனைத்தையும் பரவை காய்கறி சந்தை, மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வியாபாரிகள் வழங்குகின்றனா்.

அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை சபை உறுப்பினா்கள், கீழமாசி வீதி மளிகைக் கடை வியாபாரிகள் வழங்குகின்றனா். திருக்கல்யாண விருந்துக்கு மளிகைப் பொருள்கள் அளிக்க விரும்பும் பக்தா்கள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வழங்கி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பணியில் சேவை செய்ய விரும்பும் பக்தா்கள், தங்கள் வீட்டிலிருந்து காய்கறிகள் வெட்டும் அரிவாள்மனை அல்லது கத்தியுடன் ஏப்ரல் 13-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சேதுபதி மேல்நிலைப் பள்ளிக்கு வந்து சேவை செய்யலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →